Sunday 20 July 2014

வலியோடு வாழ்க்கையா?





ஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே

எப்போது நீ கோபம் கொண்டாலும்

இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும்

என்னை என்றேனும் நினைவில் கொண்டாயா?

துவைத்தே வெளுத்த பழைய சட்டையாகிப் போனது


உன்னால் காயப்பட்ட மனது.

எது எப்படி இருந்தாலும் சத்தமிடவும்

 சண்டையிடவுமாவது நீ வேண்டும்.

நீண்ட சண்டைக்குப் பின் அழுது ஆறுதல்

 தேட உன் மடி வேண்டும்.

No comments: